மார்த்தாண்டம், மார்ச் 19 –
களியக்காவிளை அருகே தளச்சான் விளை என்ற இடத்தை சேர்ந்தவர் சிங் (47). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவரது 18 வயது மகள் ஒருவர் படந்தாலுமூட்டில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவ தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மாணவி பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் பதறிய உறவினர்கள் பல்வேறு இடங்களில் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியம் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாணவியின் தந்தை சிங் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி குறித்து விசாரித்து வருகின்றனர்.


