கன்னியாகுமரி, மார்ச் 6 –
நாகர்கோவில் மேலராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். மனைவி ஞான தங்கராணி. மாரியப்பன் மனைவியை பிரிந்து சென்றதால் தற்போது ஞான தங்கராணி ராஜா என்ற மகனுடன் தனது தங்கை வீட்டில் கன்னியாகுமரியில் வசித்து வருகிறார். இதற்கிடையே ராஜா மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இவர் மதுபாட்டில்களை பொறுக்கி விற்று வந்துள்ளார்.
சம்பவத்தினம் ராஜா கன்னியாகுமாரி ஜீரோ பாயிண்ட் பகுதியில் மது பாட்டில்கள் பொறுக்க சென்றார். அப்போது அங்கு மூடி திறந்த நிலையில் பீர் பாட்டிலில் மது இருந்துள்ளது.
அதை எடுத்து ராஜா குடித்துள்ளார். பின்னர் அது மது இல்லை என்பது தெரிய வந்தது.
சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த ராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


