சென்னை, ஜூன் 19 –
சென்னை உள்ளகரம், கிருஷ்ணா நகர் திலகர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஜய கணபதி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. உள்ளகரம் பகுதியில் 50 ஆண்டுகளாக ஸ்ரீ விஜய கணபதி சுவாமி பரிவார தேவதைகளான ஸ்ரீ விஜயகுமார சுவாமி, விஜயராகவ சுவாமி, விஜய மணிகண்ட சுவாமி, விஜயதுர்கா தேவி, விஜயா மாருதி சுவாமி மற்றும் நவகிரக தேவதைகளுடன் வேண்டிய வரங்கள் தந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த ஆலயத்தின் திருப்பணிகள் ஆச்சாரியார்களின் அனுக்கிரகத்துடனும் இறைவனது அருள் ஆசியுடனும் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது.
நிகழும் பராபவ ஆண்டு ஆனித்திங்கள் 4 ஆம் நாள் வியாழக்கிழமை சுபயோக சுப தினத்தில் சிம்ம லக்னத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மகா பெரியவா சங்கராச்சாரியார் சுவாமிகள், அனுகிரகத்தாலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் முன்னிலையில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ சத்திய சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அனுகிரகத்துடனும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் ஆலய விழா குழுவினர் சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தினர். வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



