திருச்சி, மே 1 –
திருச்சி ஸ்ரீரங்கம் ஜே ஜே நகரில் குணசேகரன் வீட்டருகே மணிகண்டன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அதிக சத்தம் எழுப்பியதால், குணசேகரன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பாலப்பிரியன் ஆகியோர் குணசேகரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



