By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமியின் குரல்: “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” – ஆவேசமான பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமியின் குரல்: “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” – ஆவேசமான பேச்சு
விழுப்புரம்

விழுப்புரத்தில் எடப்பாடி பழனிசாமியின் குரல்: “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” – ஆவேசமான பேச்சு

Last updated: July 11, 2025 5:39 pm
July 11, 2025
70 Views
Share
SHARE

விழுப்புரம், ஜூலை 11 –

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தொனிப்பொருளில் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாள் மாபெரும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இந்நிலையில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.

அதில் பேசிய அவர், “அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.1700 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பல்கலைக்கழகம், 67 அரசு கலைக் கல்லூரிகள், 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் இந்த அனைத்து திட்டங்களும் முடங்கிக்கொண்டு விட்டன, என்று சாடினார்.

மேலும் “அரசு கலைக் கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லாத நிலை, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றுகிறது. விழுப்புரம் கலைக் கல்லூரியில் முதுநிலை பாடநெறிகள் வழங்கப்படாவிட்டால் சி.வி. சண்முகம் தலைமையில் மாபெரும் போராட்டம் நடக்கும்” என எச்சரிக்கை விடுத்தார்.

திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டிய அவர், “மக்களின் வாக்குகளைப் பெற்றவைகளை மதிக்காத ஆட்சி, வீட்டு வரி, குடிநீர் வரி, குப்பை வரி உயர்வு மூலம் மக்களை சுரண்டி வருகிறார்கள். அரிசி, கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட விலை உயர்வால் மக்கள் வாழ்வாதாரம் சிரமப்படுத்தப்பட்டுள்ளது. தனிநபர் வருமானம் குறைந்துள்ளதே இதற்கு சான்று” என்றார்.

அதிமுக ஆட்சி காலத்தில்தான் சிறுபான்மை மக்களுக்கு உண்மையான பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும் ஹஜ் பயண நிதி போன்ற விசயங்களில் கூட அதிமுக அரசின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார். “மதுரையில் ரூ.200 கோடி வரிப்பணம் முறைகேடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வகை தவறுகளை மக்கள் மறக்கக்கூடாது,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு எதிர்வரும் 2026 தேர்தலில் ஆதரவு அளிக்கலாம் எனவும், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விழுப்புரத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
விழுப்புரத்தில் “அன்புக் கரங்கள்” திட்டத்தின் மூலம் பயன் பெற்ற குழந்தைகள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
கெடாரில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடத்தினை விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தாய் தந்தை இழந்த அண்ணன், தங்கைக்கு நிவாரண உதவிகள்: காவல் ஆய்வாளர் அழகிரி வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது

November 25, 2024
87 Views
முதலமைச்சர் எம் ஜி ஆர் 108 ஆவது பிறந்தநாள் விழா
தோல் கழிவுகளை கொட்ட வந்த வாகனங்களை
ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு
ஹிமாலயா வெல்னஸ் நிறுவனத்தின் “வேர்ல்ட் ஆஃப் நீம்” என்ற இயக்கம் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account