வேலூர், ஜூலை 14 –
வியட்நாமில் கடந்த 11ம் தேதி நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 10 சுற்றுலாப் பயணிகளின் உடல்களும் இன்று (ஜூலை 14) காலை விமானம் மூலம் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி தெருவை சேர்ந்த வினையகுமார் (48) என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். விமானம் மூலமாக சென்னை கொண்டுவரப்பட்ட அவருடைய உடல் அங்கிருந்து வேலூரில் உள்ள அவருடைய இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. உடலைக் கண்ட அவரது மனைவி , குழந்தை, மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போர் மனதை உலுக்கியது.



