தென்காசி, மே 19 –
தென்காசி மாவட்டம் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன் தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுரண்டை நகராட்சி பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில திமுக இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், சுரண்டை நகர செயலாளர் கணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.



