ஈரோடு, ஜூலை 16 –
மறைந்த முதல் அமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு யுவராஜா பவுண்டேசன் சார்பில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 60 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் விருது மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு யுவராஜா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் தாளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முன்னாள் அரிமா சங்க தலைவர் யுவராஜா மற்றும் சங்கமேஸ்வரர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு பவுண்டேசன் தலைவர் யுவராஜா கூறியதாவது: தமாகாவில் மாநில பொதுச் செயலாளராக இருந்த நான் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளேன். இப்போது எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. இருப்பினும் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல் கட்சியில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும். முதல் அமைச்சர் விஜய் தலைமையில் லஞ்சம் லாவண்யமற்ற சிறப்பான ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.



