கோவை, ஜூன் 29 –
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் புதிய பத்திர பதிவு சிவா ஆவண பதிவு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை கோவை வடக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்விற்கு வருகை புரிந்து அனைவரையும் திமுக வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் தென்னை சிவா வரவேற்றார்.
இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர்கள் கூடலூர் அ.அறிவரசு,காரமடை கே.ஜி.குரு பிரசாத், மேட்டுப்பாளையம் வடக்கு அசரப் அலி, தெற்கு முனுசாமி,மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அந்தோணி ராஜ், மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் காரமடை நகர ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் வி.ஆர்.பத்திர சாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.



