திருவட்டாறு, ஜூன் 29 –
திருவட்டாறு அருகே வேர்க்கிளம்பியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்டின் 7ம் கட்ட கலவி உதவி வழங்கும் விழா வேர்க்கிளம்பியில் டிரஸ்ட் தலைவர் எஸ். காட்சே தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பி.எட்.வின் ராஜ் வரவேற்றார். ஜெயசிங், பேபி, ஜெபான்சிலி, கிரி சட்ட ஆலோசகர் வி.எஸ். நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் எம். சோபிதராஜ் அறிக்கை சமர்பித்தார்.
பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. ஆர். செல்லசுவாமி நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்தார். வேர்க்கிளம்பி பேரூராட்சி தலைவர் சுஜீர் ஜெபசிங் குமார், துணைத்தலைவர் துரைராஜ் மனுவேல்,. பசித்தோர்க்கு உணவு அறக்கட்டளை தலைவர் கருங்கல் ஜார்ஜ், பயிற்சியாளார் சேவியர் சுரேஷ்பாபு, செருப்பாலூர் கிருபா சேரிட்டப்பிள் டிரஸ் நிறுவனர் ஆர். பிராங்கிளின், திருவட்டார் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.சிவசங்கர், குழித்துறை மறைமாவட்ட அனைத்து பணிக்குழுக்களின் இயக்குநர் பங்குப்பணியாளர் என்.மார்டின் ஆகியோர் பேசினர்.
நிகழ்வில் டிரஸ்டின் இலவச டியூஷன் மையத்தில் பயின்று 10ம் வகுப்பில் 481 மதிப்பெண் பெற்ற தனிகா என்ற மாணவிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. டிரஸ்ட் பொருளாளர் சுஜின் லோகிதாஸ் நன்றி கூறினார்.



