தஞ்சாவூர். ஜுன். 3.
தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தை மேம்படுத்த திட்டமிடப்பட்டு ள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்த நூலகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தமிழ்நாட்டின் கலாசாரத்தை இது போன்ற நூலகங்களில் கிடைக்கக் கூடிய ஓலைச்சுவடிகள், காகித சுவடிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே தமிழ் நாட்டின் சிறப்பான அந்தஸ்து பெற்ற இந்த நூலகத்தில்,மழை நீர் கசிவுகள் இருக்கக்கூடாது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அருகிலேயே புதிதாக கட்டிடடம் கட்டி, சில தளவாடப் பொருள்கள் அங்கு மாற்றி பாதுகாப்பாக வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது
இதற்கு தேவையான நிதி கருத்துருக்களை ஆட்சியர் கொடுத்துள்ளார். 6 மாதங்களுக்கு ஒருமுறை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றாலும், மேலும் தேவை கள் இருப்பதாக ஆட்சியர் தெரிவித் தையும் அறிக்கையாக பெற்றுள் ளோம். இவை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப் படும்.
இந்த நூலகத்துக்கு மாநில அரசு ஒரு தொகையும், மத்திய அரசு ஒரு தொகையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனல் மத்திய அரசு நிதி ஒதுக்கீட் டை அவ்வப்போது நிறுத்தியிருந் தாலும், மாநில அரசு நிறுத்தாமல், ஊதியம், ஓய்வூதியப் பலன்கள், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியை எக்காலத்திலும் நிறுத்தியதில்லை இந்த நூலகத்தில் தற்போது போது மான பணியாளர்கள் உள்ளனர்.
இன்னும் கூடுதல் பணியாளர் களை நியமிப்பது தொடர்பான அறிக்கையும் பெற்றுள்ளோம்.
. கட்டாய கல்வி உரிமை சட்டத் தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தமிழக முதல்வர் கூறியபடி வழக்குத்தொடுப் பதற்கான பணி நடைபெறுகிறது.
பள்ளி தொடங்கும் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், பை உள்ளிட்ட விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போன்ற கருத்தாகத்தான் பார்க்கிறேன் என்றார். அமைச்சர்
அப்போது, மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா,சரசுவதி மகால் நூலக அலுவலர் மார்ஸ் தாசில்தார் சிவக்குமார், நூலக அதிகாரிகள், பண்டிதர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்



