நாகர்கோவில் ஜூன் 17
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கஸ்தூரிபாய் மாதர் சங்க அரங்கில் களியக்காவிளை அருகே உள்ள வாறுதட்டு அன்னை தெரசா அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு விழாவில் ஏழை மக்களின் துயர் துடைக்க பாடுபட்டுக் கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா, உடற்கல்வி இயக்குனர் தேர்வுக்கான வினா வங்கி புத்தகம் வெளியிட்டு விழா, விதைப்பந்து மற்றும் மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கும் விழா என நடைபெற்ற முப்பெரும் விழா அன்னை தெரசா அறக்கட்டளை தலைவர் பிரேம் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முதலாவதாக இறை வணக்க பாடலாக திருக்குறள் பாடப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் முனைவர் மெர்லியென்ட் தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விருதுகளை வழங்கினார்.
வழக்கறிஞர் சுவாமிநாதன், சரலூர் ஜெகன், முனைவர் ஜஸ்டஸ் அமிர்தையன், ஜெயக்குமாரி, வன நித்தியா,பாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கருங்கல் ஜார்ஜ் அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். நிறுவனர் மற்றும் விழா தலைவர் என்.எம்.பிரேம் ராஜ் தலைமை உரை ஆற்றினார். உடற்கல்வி இயக்குனர் தேர்வுக்கான வினா வங்கி புத்தகத்தை காளிதாஸ் உடற்கல்வி ஆசிரியர் சிறப்பு விருந்தினர் மற்றும் தலைவர் கரங்களால் பெற்றுக் கொண்டார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டது. விழாவில் 25 சமூக ஆர்வலர்களுக்கு கேடயம்,விருது சான்றிதழ், மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் அனைவரையும் மகிழ்விப்பதற்காக கிராமிய விழிப்புணர்வு பாடலையும் உலக சாதனையாளர் கலை இளமணி தீரஜ் பாடினார். முப்பெரும் விழா நிகழ்ச்சியை கலை ஆர்வலர் ஜோணி அமிர்த ஜோஸ் தொகுத்து வழங்கி அனைவருக்கும் நன்றி பாராட்டினார். விழாவில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



