சங்கரன்கோவில், நவ. 1 –
சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தென்காசியில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு இருசக்கர வாகனங்கள் வழங்கினார். இரு சக்கர வாகனம் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் பாலமுருகன், ரஹ்மதுல்லா, ரம்யா உள்ளிட்டோர் சங்கரன்கோவிலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவை சந்தித்து தங்கள் தொழில் வாழ்வாதாரம் மேம்பட தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தங்கள் கோரிக்கையை ஏற்று வாகனம் வழங்க நடவடிக்கை எடுத்த ராஜா எம்எல்ஏ விற்கும் தங்கள் வாகனத்துடன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, அன்பரசு, கடற்கரை, கிறிஸ்டோபர், குணசேகரன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைபாண்டியன், ஆறுமுகம், ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி, நகராட்சி கவுன்சிலர் ராஜா ஆறுமுகம், மாணவரணி வெங்கடேஷ், வர்த்தகர் அணி ரகுமான் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



