தென்தாமரைகுளம், மே 25 –
அகஸ்தீஸ்வரம் கீழச்சாலை, பெரியசாமி கோவில் தெருவில் அமைந்துள்ள பெரியசாமி திருக்கோவில் கொடைவிழா இன்று 25ம் தேதி திங்கள் கிழமை தொடங்கி 27ம் தேதி புதன்கிழமை வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
முதல் நாள் விழாவான இன்று 25ம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நண்பகல் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 8.30 மணிக்கு பஜனை, 9 மணிக்கு நையாண்டி மேளம், 9.30 மணிக்கு
வில்லிசை (சாமி, சாஸ்தா வரலாறு), 9.45 மணிக்கு விநாயகருக்கு தீபாராதனை, 10 மணிக்கு அம்மாள் சுவாமிக்கு தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமி சாஸ்தாவுக்கு அலங்கார தீபாராதனை, 12.30 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
இரண்டாம் நாள் விழாவான 26ம் தேதி நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், 9 மணிக்கு வில்லிசை (மார்க்கண்டேயன் வரலாறு), பகல் 11 மணிக்கு சங்கிலிபூதம் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு காலன், செங்கிடாக்கார சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனை, 12.15 மணிக்கு காலசுவாமி மஞ்சள் நீராடுதல், 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, இரவு 8 மணிக்குகச்சேரி மேளம், 8.30 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு மாலையம்மை சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12.30 மணிக்கு பெரிய சுவாமிக்கு விசேஷ அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
மூன்றாம் நாள் விழாவான 27ம் தேதி புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு நீலன், நீலி (இசக்கி அம்மன்) சுவாமிகளுக்கு அலங்கார தீபாராதனையும், காலை 9 மணிக்கு மகுடக்கச்சேரி மற்றும் சிறப்பு நடனம், பகல் 11 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.



