கன்னியாகுமரி அக் 13
குமரி மாவட்டம் பகவதியம்மாள்புரம் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கலில் நவராத்திரி விழா நேற்று கொண்டாடப்பட்டது .இதையொட்டி காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை ,இனிமம் வழங்குதல் நடைபெற்றது.
பகல் 12 மணிக்கு உச்சி படிப்பும் அதனைத்தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு அய்யாவை வணங்கி,சமபந்தி விருந்தினை துவக்கி வைத்தார் .
இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ்,தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும் ஆரல்வாய்மொழி சிறப்புநிலை பேரூராட்சி தலைவருமான முத்துக்குமார் ,ஒன்றிய பொருளாளர் தங்கவேல் ,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வக்கீல் ராஜேஷ் ,ஐ.டி.விங் நிர்வாகி குமரகுரு,பேரூர் செயலாளர்கள் குமார்,எழிலன் அதிமுக கவுன்சிலர் விஜயன்,நிர்வாகிகள் பெரியவிளை கண்ணன் ,ரெமோ உட்பட கோயில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்



