விளாத்திகுளம், ஆகஸ்ட் 29 –
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள மேலக்கரந்தையில் ஜெயராம் – ராசாத்தி தம்பதியின் மகள் மதி ராகினி பூப்பனித நீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த மதிராகினி தாய் மாமன்கள் தங்க நகைகள், புத்தாடைகள், மா, பலா, வாழை, மாதுளை, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளுடன் அனைத்து வகை மிட்டாய்கள், அரிசி, பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 101 வகைகளில் சீர்வரிசை, 12 அண்டா, 4 குத்து விளக்குகள், ஆறு கிடாய் ஆடுகள் என இரண்டு டிராக்டர்கள் மற்றும் ஒரு லோடு ஆட்டோ என மூன்று வாகனங்களில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கைகள் சிதறடிக்க ஊர்வலமாக கொண்டு வந்து மருமகளுக்கு சீர் செய்து அசத்தினர்.



