By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில அளவிலான போதை பொருள் இல்லாத தமிழ் நாடு என்னும் உறுதிமொழி ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மாநில அளவிலான போதை பொருள் இல்லாத தமிழ் நாடு என்னும் உறுதிமொழி ஏற்பு
தஞ்சாவூர்

மாநில அளவிலான போதை பொருள் இல்லாத தமிழ் நாடு என்னும் உறுதிமொழி ஏற்பு

Last updated: August 12, 2025 6:01 pm
August 12, 2025
39 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஆகஸ்ட் 12 –

சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் மாநில அளவிலான போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்னும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் மாநில அளவிலான போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்னும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், துரை சந்திரசேகரன் எம்எல்ஏ (திருவையாறு), மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளு டன் உறுதிமொழி ஏற்றனர்.

போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உறுதி கூறுகிறேன். உறுதி மொழியை துணை முதலமைச்சர் வாசிக்க அனைத்து மாவட்டத்திலும் உள்ள மாணவ மாணவிகள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் தஞ்சாவூர் பாரத் கல்லூரி வளாகத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தினை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

மாநிலத்தில் போதை பொருள் தடுப்பு குழுவில் சிறந்து விளங்கிய தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசு ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சரிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) செந்தில், பாரத் கல்லூரியின் தாளாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குமார், வீரபாண்டி, உதவி ஆணையர் (கலால்) ரேணுகாதேவி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, தாசில்தார் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் புதிய நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம்; அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்
தஞ்சாவூர் ரயில்வே நிலையத்தில் பயணங்களில் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் !!
அமித்ஷாவை கண்டித்துஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை
20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 10 குடமுழுக்கு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா

September 30, 2024
46 Views
பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் முகாம்
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
குளச்சல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபர் மீது தாக்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account