திருச்சி, மே 2 –
மணப்பாறை அருகே உள்ள என். பூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்னாசி, வீட்டில் மின்சாரம் வரவில்லை எனக் கூறி மின்மாற்றி மீது ஏறி பீஸ் போட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்தத் தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



