நாகர்கோவில், டிச. 15
கலப்பை மக்கள் இயக்க தலைவரும் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி.டி செல்வகுமார், சென்னையில் முதல்வர் முன்னிலையில் திமுகவில் தனது இயக்கத்தை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து நேற்று நாகர்கோவிலுக்கு அவர் வருகை தந்தார். குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து வடசேரி பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின் ஒழுகினசேரியில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்ற அவர் கலைஞர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது: கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை திமுக என்ற மாபெரும் இயக்கத்துடன் சேர்ந்து மக்கள் நலப் பணிகளை விரிவு படுத்த உள்ளதாக தெரிவித்தார், திமுகவில் இணைந்தாலும் மக்களுக்கு உதவி செய்யும் பணிகள் தொடரும், அப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்கள் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜையை எதிர்த்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் திமுக தலைமை வாய்ப்பு தந்தால் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.



