தருமபுரி, ஏப்ரல் 27 –
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பண்டாரசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கார்மேகம் (28). இவர் பொம்மிடி அரசு போக்குவரத்துக் கழக கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 23ம் தேதி அரசு பஸ்சில் வேலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் சென்று கொண்டிருந்தார்.
சேலம் – அரூர் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் அருகே காலை பஸ் சென்றது. அப்போது பின்னால் வந்த லாரி எதிர் பாராத விதமாக அரசு பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் பின் பக்க கண்ணாடிகள், படிக்கட்டு உடைந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


