By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு அதிகாரிகள் பாரம்பரியத்தை காத்திட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அரசு அதிகாரிகள் பாரம்பரியத்தை காத்திட வேண்டும்
திருப்பூர்மாவட்டம்

அரசு அதிகாரிகள் பாரம்பரியத்தை காத்திட வேண்டும்

Last updated: August 12, 2024 1:13 pm
August 12, 2024
55 Views
Share
SHARE

திருப்பூர், ஆக. 9:

கைத்தறி ஆடைகளை வாங்கி அரசு அதிகாரிகள் பாரம்பரியத்தை காத்திட வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் கைத்தறி தின விழாவில் கூறினார்.

 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 10-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி துறை சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சியை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டிருந்த கைத்தறி கண்காட்சியினை பார்வையிட்டார்.

இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-

தேசிய கைத்தறி தினமானது 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறியின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நெசவாளர்களின் பெருமையை உயர்த்தவும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி துறை சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சி நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. மேலும், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கதர்கிராம தொழில்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஜவுளி கண்காட்சியினை பார்வையிட்டு விற்பனை துவக்கி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் மென் பட்டு சேலைகள், கோர காட்டன் சேலைகள், பெட்சீட், ஜமுக்காளம் துண்டுகள் மற்றும் மிதியடிகள் ஆகியவை பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றை கொண்டு பாரம்பரிய தொழில்நுட்பத்துடனும், தனித்துவத்துடனும் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேற்படி கைத்தறி ரகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கைத்தறி  ஆடைகள் உள்ளிட்ட ரகங்களை பெருமளவில் வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடவும் கைத்தறியின் பாரம்பரியத்தை காத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கைத்தறி துறையின் சார்பில் 17 கைத்தறி நெசவாளர்களுக்கு நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்ட ஆணையினையும் 3 கைத்தறி நெசவாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெசவாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியத் திட்ட ஆணையினையும், நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.50,000 வீதம் 10 நெசவாளர்களுக்கு ரூ.5.00 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலையையும், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 11 உறுப்பினர்களுக்கு ரூ.6.36 லட்சம் மதிப்பிலான திட்டத்தொகையினையும் கலெக்டர் வழங்கினார்.

இந்த விழாவில் திருப்பூர் சரக கைத்தறி துறை உதவி இயக்குநர் கார்த்திகேயன். கதர்துறை உதவி இயக்குநர் எஸ்.சுரேஷ், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் ஜெகநாதன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விநாயகர் கோவில் குடமுழக்கு விழா
கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்
உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள்
தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்
கொள்கை தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியு மன அஞ்சலை அம்மாள் 135-வது பிறந்த நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு

February 14, 2025
52 Views
நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்
டாக்டர் ஜெயசேகரன் மருத்துவ அறக்கட்டளை சார்பில் ” மாஸ்டரிங் ப்ராக்டாலஜி டெக்னிக்ஸ்” கருத்தரங்கு
புளியங்குடியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம்; அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து
திருவாடுதுறையில் விநாயகர் ஆலய கும்பாபிசேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account