கோவை: 22.08.2026
பேரூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பேரூரில் உள்ள தனியார் திருமண அரங்கில் 13-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், சங்க அலுவலக கல்வெட்டு திறப்பு விழா மற்றும் குடும்ப விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் சங்கத்தின் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் வளர்ச்சி, வியாபாரிகளின் நலன் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் தேவையுடையோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற குடும்ப விழாவும் நடைபெற்றது.
விழாவில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து உறுதியளிக்கப்பட்டது.



