சேலம்: ஆக.27.
சேலம் ஸ்ரீ ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாடு மற்றும் அடிப்படை வசதி பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் நேரில் ஆய்வு செய்தார்.
கோவில் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்ட அவர், பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற தேவையான பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடனிருந்தனர். ஆய்வின்போது எடுத்த படம்.



