தருமபுரி, ஜூலை 02 –
பென்னாகரம் – பவளந்தூர் இடையே புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பிற்கான சேவையினை தவெக மேற்கு மாவட்ட செயலாளர் சிவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பென்னாகரம் அருகே வட்டுவனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பவளந்தூர் பகுதியில் 200 – க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் காலை நேரங்களில் பென்னாகரம், மாமரத்து பள்ளம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லாததால் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. பவளந்தூர் பகுதிக்கு காலை மற்றும் மாலை வேளையில் பவளந்தூர் கிராமப் பகுதிக்குள் பேருந்து சேவை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நகரப் பேருந்து 26 சி ஒரு நாளுக்கு மூன்று முறை பவளந்தூர் ஊருக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து சேவையை வரவேற்கும் வகையில் தவெக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவன் தலைமையில் கிராம மக்கள் பேருந்துக்கு பூஜை செய்து வழித்தட நீட்டிப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உடன் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனை மேலாளர் சுதாகர், பென்னாகரம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித், மாவட்ட இணை செயலாளர் வீரமணி, முர்த்தி, பென்னாகரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் பன்னீர், கார்த்திக், கணேசன், சந்தோஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்கராஜ், குமார், விவாசய அணி பொறுப்பாளர் மணி, கவின், மணி, கிருஷ்ணன், விமல்ராஜ், பச்சியப்பன் மற்றும் பவளந்தூர் ஊர் கவுண்டர் மூர்த்தி, நாகராஜ், சின்ன கவுண்டர், தமிழ்குமரன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



