புதுக்கடை, அக். 22 –
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளாக நியமிக்கபட்ட மாநில, மண்டல, மாவட்ட மற்றும் பாசறை நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்வு புதுக்கடையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொறியாளர்.பி. வ ஹிம்லர் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொறியாளர் பி. வ ஹிம்லர் பொறுப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜென்கின்ஸ் மற்றும் மண்டல செயலாளர் கிளிட்டஸ் கொன்சால்வஸ் ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர்.
பின்பு அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
நிகழ்ச்சியை மகளிர் பாசறை நிர்வாகி கலாராணி தொகுத்து வழங்கினார். இந்ந நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் கிள்ளியூர் தொகுதி நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.



