கோவை, ஜூன் 20 –
கோவை நல்லாம்பாளையம் மாசாணியம்மன் கார்டன் பகுதியில் அமைந்துள்ள அருள்தரும் ஸ்ரீ இராஜகாளியம்மன் திருக்கோவிலில் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவானது கடந்த திங்கட்கிழமையன்று முளைப்பாரி,தீர்த்த குடம் மற்றும் ஊர் பெரியோர்கள் அழைத்தல், மங்கள இசை, திருவிளக்கு ஏற்றுதல், புனித நீர் வழிபாடு என பல்வேறு பூஜைகள் நடைப்பெற்றது.
செவ்வாய்க்கிழமை விநாயகர் வழிபாடு, கலா தரிசனம்,கும்ப அலங்காரம், இளங்கோவில் தெய்வங்கள் மற்றும் இராஜகாளியம்மன் திருக்கவசங்களில் எழுந்தருள செய்தல், யாகசாலை வாயிற்காவலர், 108 வகை மூலிகை ஆகுதி,நிறை ஆகுதி, பேரொளி வழிபாடு, மலர் அர்ச்சனை, திருமுறை விண்ணப்பம் என ஏராளமான பூஜைகள் புதன்கிழமை அன்று திருப்பள்ளி எழுச்சி, மங்கல இசை, கருத்தினால் திருமஞ்சனம் பாவன அபிஷேகம், தீர்த்த குடம் எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்து வருதல், ஜமாப் இன்னிசை நிகழ்ச்சி, கோபுர விமான கலசங்கள் நிறுவுதல், அடியார்கள் வழிபாடு, தெய்வத்திருமேனிகளை ஆதார பீடத்தில் வைத்து எண் வகை மருந்து சாற்றுதல் வியாழக்கிழமை அன்று திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, தெய்வத்திருமேனிக்கு ஆனனந்து ஆட்டி திருக்காப்பு அணுவித்தல், விநாயகர், கன்னிமார், கருப்புராயன் கோபுரங்கள் தெய்வங்கள் மற்றும் இராஜகாளியம்மனுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா மகா கும்பாபிஷேகம் பன்னிசை மணி சிவத்திரு. கேங்காதர தேசிகர், திருமுறை கலாநிதி சிவத்திரு. ஆனந்தசிவம், சிவத்திரு. கணேஷ், சிவத்திரு. ஹரிபிரசாத், சிவத்திரு.தனுஷ் குமார் ஆகியோர் முன்னிலையில் மகா கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.



