திருப்பூர், ஜூன் 9 –
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேல் இட பொறுப்பாளருமான சூரஜ் ஹெக்டே நேற்றைய தினம் உடல் நலகுறைவால் உயிர் இழந்தார். இந்நிலையில் உயிரிழந்த சூரஜ் டேவின் நினைவை போற்றும் வகையில் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பார்க் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான ராஜீவ் பவன் அரங்கத்தில் மாநகர் மாவட்ட தலைவர் கோபால் சாமி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சூரஜ் ஹெக்டேவின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் INTUC மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் பாகநேரி ரவீந்திரன், சிறுபான்மை பிரிவு முபாரக் பாஷா, குருசாமி, சேக் தாவூத், பொன்னுச்சாமி, ராஜேந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் அபிஷேக், துணைத் தலைவர் சந்திப், பிரதீப், மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி ஆஷா, INTUC ஶ்ரீனிவாசன், பாபு, கோபாலகிருஷ்ணன், பூபதி, பரமசிவம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



