தஞ்சாவூர், ஜுலை 3 –
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் கருத்து கேட்புக் கூட்டத்தில் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மற்றும் இரண்டு மூதாட்டிகள் உள்பட சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கருத்து கேட்பு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் அமைச்சர்கள் வினோத் மற்றும் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே அதிருப்தியில் இருந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்பு பயிர் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். குருவை மற்றும் சம்பா சாகுபடி பொய்த்து விட்ட நிலையில் ஏக்கருக்கு ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயி அய்யாகண்ணு தலைமையில் மூதாட்டிகள் இரண்டு பேர்கள் உள்பட 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



