தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2 ஆதிதிராவிடர் மற்றும் ஒரு பழங்குடியினர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1.65 இலட்சம் மானிய நிதி உதவி வீதம் ரூ.4.95 இலட்சம் மதிப்பில் நிதியுதவி பெறும் வகையில் பால் வளத்துறையால் பதிவு செய்யப்பட்டு, பதிவு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் வழங்கினார். உடன் ஆவின் பொது மேலாளர் மாலதி, சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



