தஞ்சாவூர், நவம்பர் 25 –
நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் தி.மு.க. கூட்டணி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா, உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கம், முரசொலி எம்பி, மாவட்ட பொறுப்பாளர்கள் அன்பழகன் எம் எல் ஏ, பழனிவேல், எம்எல்ஏக்கள் டி கே ஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், முன்னாள் எம் பி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ண சாமி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்றார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திமுக விவசாய அணி மாநில செயலாளருமான ஏ.கே.எஸ். விஜயன் தலைமை தாங்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் அமர்சிங், மதிமுக துணை பொது செயலாளர் ஆடுதுறை முருகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயினுல் ஆபிதீன் மனித நேய மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் ரஹ்மத் அலி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொகுதி செயலாளர் அண்ணாதுரை, மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய மாவட்ட செயலாளர் வல்லம் ரியாஸ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவில் மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன் நன்றி கூறினார்.



