இராமேஸ்வரம், அக். 15 –
மறைந்த முன்னால் குடியரசுத்தலைவர் டாக்டர். ஏபிஜே. அப்துல் கலாமின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு கலாம் குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. கலாம் நினைவிடத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ராமேஸ்வரம் ஜமாத்தார்கள் ஆலிம்சாக்களை கொண்டு துவா செய்தனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்வில் கலாமின் அண்ணன் மகன் ஜெய்னுலாவுதீன் நஜிமா மரைக்காயர் கலாமின் பேரன்கள் சேக்சலீம் சேக் தாவூத் ஆகியோர் உட்பட்ட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.



