மார்த்தாண்டம், ஆக. 11 –
நித்திரவிளை அருகே தூத்தூர் கே.ஆர். புரம் மேற்கு பகுதி சேர்ந்தவர் ஜூலியன் (39). அயர்லாந்து நாட்டில் மருத்துவமனையில் ஆண் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஊரில் உள்ள அவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான பைக்கில் நித்திரவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆலுமூடு என்ற பகுதியில் வைத்து தேங்காபட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி தொழிலாளிகள், மீன்பிடி உபகரணங்களுடன் மேற்கு கடற்கரை சாலையில் தவறான பாதையில் அதிவேகமாக வந்தனர்.
அப்போது மினி டெம்போ ஜூலியன் மீது மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜூலியன் மற்றும் அவரது பைக் அந்த பகுதியாக மற்றொரு பைக்கில் சென்று கொண்டிருந்த நித்திரவிளை பகுதி கோட்ட விளையை சேர்ந்த கூலி தொழிலாளி சுஜன் (32) என்பவர் மீது விழுந்துள்ளது. இதில் அவரும் காயமடைந்தார். ஜூலியன் நெய்யாற்றின் கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஜூலியன் சென்ற பைக் விழுந்து படுகாயம் அடைந்த காயமடைந்த சுஜன் நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மினி டெம்போவை ஓட்டிய மார்த்தாண்டன்துறை பகுதியைச் சேர்ந்த பென்னி (30) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



