திருப்பத்தூர், மே 20 –
திருப்பத்தூர் அடுத்த பாப்பானூர் மேடு பகுதியைச் சேர்ந்த தமிழரசு சித்ரா தம்பதியின் மகள் செல்வி கடந்த 23.12.2025 அன்று வெலக்கல் நத்தம் அடுத்த கிட்ட பையனூர் பகுதியில், வசித்து வரும் தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கு எதிர்பாராத விதமாக காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் காணாமல் போன தன் மகளை கண்டு பிடித்து தருமாறு புகார் மனு அளித்துள்ளனர். அதன் பின்னர் பல முறை காவல் நிலையத்திற்கு சென்று தன் மகளை கண்டுபிடித்து தருமாறு தாய் தந்தை கோரியுள்ளனர். ஆனால் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் காவல் துறையினர் மெத்தன போக்காக செயல்பட்டு வருவதாக குற்றசாட்டினை முன் வைக்கின்றனர்.
மேலும், வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டபோது, உங்கள் மகள் “22 வயது ஆகிவிட்டதால் தனியாக சென்றிருக்கலாம்” என்ற அலட்சியமான பதில் கூறி வருவதாக குற்றசாட்டு முன் வைக்கின்றனர். அதேபோல், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பரிசோதிக்க கேட்டபோதும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் மற்றும் உதவி ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், தன் மகளை விரைவில் கண்டுபிடித்து தர உத்தரவு பிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லியிடம் கோரிக்கை மனுவை கண்ணீர் மல்க பெண்ணின் தாயார் சித்தரா வழங்கினார்.
அப்பகுதி மக்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்று குற்றசாட்டினை முன்வைக்கின்றனர். காணாமல் போன இளம் பெண்ணை கண்டு பிடிக்க காவல் துறையினர் மெத்தன போக்காக செயல்படுவதை குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு சென்ற இந்த சம்பவம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பது பெற்றோரின் கண்ணீராக உள்ளது…?



