விளாத்திகுளம், ஜூலை 13 –
வருகின்ற ஆகஸ்ட் 17ம் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள எழுச்சித்தமிழர் பிறந்தநாள், தமிழ் தேசிய எழுச்சி மாநாடு கூட்டத்திற்கான மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆ.சடையாண்டி தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் ராஜகுமார் நடைபெற உள்ள தமிழ் தேசிய இன எழுச்சி மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட துணைசெயலாளர் சண்முகராஜ், சுந்தர், கோட்டைச்செல்வி, முகாம்பியா, குழந்தை எசு, தினேஷ் வளவன், அசோகன், மேட்சம், விஜயன், கதிரேசன், இளையாரஜா, முருகச்செல்வம், தினேஷ், ராஜவேல், சந்தரசேகர், ஆனந்த், ராஜ்சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



