திருவண்ணாமலை, செப். 17 –
நல்லாசிரியர் விருது பெற்ற நடுப்பட்டு தலைமையாசிரியருக்கு ஊர் பொது மக்கள் இணைந்து பாராட்டு விழாவை நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், நெய்வாநத்தம் ஊராட்சி மதுரா நடுப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் அ.முனுசாமியின் சிறந்த பணியை பாராட்டி எம்.பி. கிராண்ட் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தையும், நல்லாசிரியர் விருதையும் வழங்கி உள்ளது. மேலும் இவருக்கு செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் பன்னாட்டு அரிமா சங்கங்கள் இணைந்து நல்லாசிரியர் விருதை வழங்கி சிறப்பித்தது.
டாக்டர் பட்டம் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் முனுசாமிக்கு நெய்வாநத்தம் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவுக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர் வசுமதி முருகன் ஆகியோர் தலைமை தாங்கினார். ஊர் முக்கிய பிரமுகர்கள் தலைமையாசிரியரின் சிறந்த பணியை பாராட்டி பேசினார்கள். விழா ஏற்பாடுகளை வனிதா கோவிந்தன், ஜெயராஜ் சுமதி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உதவி ஆசிரியர் பெ. ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.



