குளச்சல், ஆக. 16 –
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணம் மீனவர்கள் இன்று சனிக்கிழமை காலையில் வழக்கம்போல் வள்ளத்தில் மீன் பிடிக்க சென்றனர். சுமார் 3 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் வலையைப் போல் போட்டு மீன் கொடுத்துக் கொண்டிருந்தபோது முட்டம் பகுதியை சேர்ந்த வள்ளம் மீனவர்கள் கடியப்பட்டணம் மீனவர்களிடம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தகராறு செய்தனர். இதில் மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் ஆரோக்கிய மகேஷ் (41), ஆண்டனி தினேஷ் (38) படுகாயம் அடைந்தனர். அவர்களை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். குளச்சல் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ஆட்சியர் வழங்கிய அனுமதி படி மீன்பிடித்த எங்களை தாக்கிய மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகர்கோவிலில் மீன்வளத் துறை அலுவலகத்தை பாதிக்கப்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.



