சென்னை, ஏப்ரல் 28 –
இந்தியாவில் மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் உற்பத்தி செய்வதில் முன்னணியிலும் ரூ.4000 கோடி மதிப்பிலான விற்றுமுதல் கொண்ட, ஜான்சல் லிஃப்ட்ஸ் நிறுவனம் ஆகும். அது தோஷியா ஜான்சன் எலிவேட்டர்ஸ (இந்தியா) நிறுவனத்தில் தனது பங்கு முதலீட்டை அதிகப்படுத்தியன் மூலம் பெரும்பான்மை பங்குதாரராக மாறியிருப்பதாக இன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்திய சந்தைக்காக இவ்விரு நிறுவனங்களும் உலகத் தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்கிறது.
ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் யோஹன் கே. ஜான் பேசும்போது: ஜான்சன் நிறுவனம் பெரும்பான்மை பங்குதாரராக மாறியிருப்பதால் தோஷிபா ஜான்சன் எலிவேட்டர்ஸ் நிறுவனமானது புதிய வளர்ச்சியை நோக்கி நகர்த்துள்ளது. தோஷிபாவின் தொழில்நுட்பத் திறனும் பொருட்களின் தரமும் இந்திய சந்தையை பற்றிய எங்களது புரிதலும் விற்பனை, சேவை வசதிகளும் பெரும்பான்மை வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன. இந்தியாவில் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளின் தேவை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தோஷிபா தனது சந்தையை மேன்மேலும் விரிவாக்கி கொள்ள முடியும்.
ஜான்சன் மற்றும் தோஷிபா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்துள்ள நிலையில், மின் தூக்கிகளின் சந்தை மதிப்பில் இந்நிறுவனங்களின் பங்கு 20%, நகரும் படிக்கட்டுக்கான சந்தை மதிப்பில் இவற்றின் பங்கு 30% உயர்ந்துள்ளன. இதனால், பிரீமியம் மற்றும் அதிவேக நகர்திறன் தீர்வுகளை (mobility segment) வழங்குவதில் இந்தக் குழுமத்தின் சந்தை வலிமை மேலும் உறுதியாகியுள்ளது என்றார்.
மேலும் இதன் நிர்வாக இயக்குநர்வில்ஃப்ரெட் க்ளாரன்ஸ் மார்டின் ‘தோஷிபா ஜான்சன் நிறுவனமானது இந்திய சந்தையில் விற்பளை மற்றும் சேவைத் திறனை வலிமைப்படுத்தி கொண்டு வாடிக்கையாளர்களின் தொடர்பையும் அதிகரித்துக்கொள்ள விரும்புகிறது. இதன் மூலம், இந்தியாவில் விற்பனையாகும் ஜப்பானிய மின் தூக்கிகளின் சந்தையில் தோஷிபா ஜான்சன் முதன்மைப்படுத்திக்கொள்ள இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார்.



