By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோவாளையில் பண மோசடி வழக்கில் கைதுக்கு சென்ற எஸ்ஐ மீது நாயை ஏவி கடிக்க வைத்த கணவன் மனைவி: 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளையில் பண மோசடி வழக்கில் கைதுக்கு சென்ற எஸ்ஐ மீது நாயை ஏவி கடிக்க வைத்த கணவன் மனைவி: 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தோவாளையில் பண மோசடி வழக்கில் கைதுக்கு சென்ற எஸ்ஐ மீது நாயை ஏவி கடிக்க வைத்த கணவன் மனைவி: 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

Last updated: June 9, 2026 6:59 pm
June 9, 2026
27 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 9 –

இரணியல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் ராஜ் (31). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது சித்தி மகள் கிருஷ்ணவேணி (25). இவரது கணவர் நாகசுமன் (26) என்பவர்கள் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரின்ஸ் ராஜ் ஜவுளிக்கடை நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டது. இது பற்றி அறிந்த கிருஷ்ணவேணி பிரின்ஸ் ராஜிடம் தனது கணவர் நாகசுமன் வழக்கறிஞர் என்றும், பிரின்ஸ்ராஜ் மாமனார் சொத்தை நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதற்காக பிரின்ஸ் ராகிடம் ரூ.5 லட்சத்து 93 ஆயிரத்து 390 ரூபாய் பணம், மற்றும் ரூ 8 லட்சம் மதிப்புடைய சொகுசுகார் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு நீதிமன்றத்தில் எந்தவித வழக்கும் போடாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரின்ஸ் ராஜ் இது சம்பந்தமாக கேட்டபோது, அவரை மிரட்டி பணம் தர முடியாது என தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆரல்வாய்போலீஸ் நிலையத்தில் பிரின்ஸ் ராஜ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் போலீஸ் தேடி வந்த நாகசுமன், அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் தோவாளையில் வீட்டில் இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்ததால் இன்ஸ்பெக்டர் பச்சைமால், சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது நாகசுமன் தப்பிக்க முயன்றார். மனைவி கிருஷ்ணவேணி போலீசாரை உள்ளே செல்ல விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும் போலீசார் மீது கிருஷ்ணவேணி தன்னுடைய நாயை ஏவி உள்ளார். அந்த நாய் சப்-இன்ஸ்பெக்டர் அனுஜனை கடித்து குதறியது. இதில் அவருக்கு இரத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் கணவன் மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் உடல்நிலை சரியில்லை என கூறியதால் இருவரும் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி, நாயை ஏவி விட்டு அரசு பணி செய்து விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3 பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நாகசுமன் மீது மதுரை தெப்பக்குளம், அண்ணா நகர், நீலகிரி மாவட்டம் ஊட்டி, நெல்லை நாங்குநேரி, திருப்பூர் மடத்துக்குளம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளனதாக தெரியவந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மருத்துவக் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் திடீர் தர்ணா
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம்
ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
ஒருங்கிணைக்கும் அஞ்சல் கிராம சபை கூட்டம்
விளாத்திகுளம் அருகே வெவ்வேறு பகுதியில் இருவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விமதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு நிறைவு

June 15, 2024
151 Views
திருப்பூர் மாநகராட்சி 41 வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு பணி
தொண்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்: மனுக்களைப் பெற்ற கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account