ராமநாதபுரம், ஜுன் 3 –
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஆறு மாவட்ட இறகுப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. தொண்டி ராலிஸ் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில், தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பயர் குரூப் இணைந்து நடத்திய ஆறு மாவட்ட அளவிலான இறகுப்பந்து (Badminton) போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த போட்டிக்கு கிளப் தலைவர் சாதிக் பாட்ஷா தலைமை தாங்கினார்.
போட்டியை மெட்ரோ பர்னிச்சர் நவாஸ்கான், ஐ எம்எஸ் லியாக்கத், சீத்தாராமன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பேட்மிட்டன் அசோசியேஷன் நிர்வாகி ராஜசேகர், ஆசிரியர் சக்தி, கோர்ட் ஓனர் மற்றும் நிர்வாகிகள், அப்துல் கரீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டி முடிவுகள்
மென்ஸ் ஓப்பன் பிரிவு
முதல் பரிசு : தஞ்சை லோகேஷ் – பகுருதீன்
இரண்டாம் பரிசு : காரைக்குடி வீரபாண்டியன் – வாட்சன்
மூன்றாம் பரிசு : மதுரை பிரவீன் – கார்த்தி, காரைக்குடி வருண் – முருகன்
65 பிரிவு
முதல் பரிசு : லோகேஷ் – குமார் (பட்டுக்கோட்டை)
இரண்டாம் பரிசு : காதர் – வருண் (மீமிசல்)
மூன்றாம் பரிசு : பிரேம் நசீர் – சஞ்சீவ் (மதுரை), வாட்சன் – சுரேஷ்
90 பிரிவு
முதல் பரிசு : காதர் – சந்திரன் (மீமிசல்)
இரண்டாம் பரிசு : பிரேம் நசீர் – சுபாஷ்
மூன்றாம் பரிசு : பைசல் – குதுப்தீன் (தொண்டி), கார்த்திக் – செந்தில் (மதுரை)
வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் சாதிக் பாட்ஷா தலைமையில், பைசல், குதுப்தீன், எஸ்.எம்.பி. இஸ்ஸத்தீன், சதிஸ் காமராஜ். ராஜ் டெய்லர் , ஜிப்ரிக், தேவேந்திரன், அப்துல்லா, சேகர், பெரியசாமி, பாலா, பயாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக எஸ்.எம்.பி. இஸ்ஸத்தீன் நன்றி கூறினார். விளையாட்டு வீரர்களின் பங்களிப்பும், பொதுமக்களின் ஆதரவும் போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.



