திருச்சி, மே 2 –
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தி.மு.க சட்டத்துறைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ கலந்துகொண்டு வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் விழிப்புடன் செயல்படுவது குறித்து விளக்கவுரையாற்றினார்.



