கடையநல்லூர் டிச 31
கடையநல்லூரில் கழிவு நீர் சீராக வழிந்து ஓடாததால் கொசுக்கள் கும்மாளமிட்டு பொதுமக்களை பதம் பார்த்து வருகின்றது..
கடையநல்லூர் நகராட்சியில் சுகாதாரத்துறை வெகுவாக கோமா நிலைக்கு சென்றுள்ளது பெரும் கவலை அழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் மேலும் நகரில் குப்பை அள்ளுவது மட்டுமே தங்களுடைய பணி என்று இதர பணிகளை ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை குறிப்பாக கழிவு நீர் கால்வாய்கள் சீராக வழிந்தோட வழிவகை செய்யாமல் இருப்பதினால் நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி அதில் கொசுக்கள் ஒட்டுமொத்தமாய் குடியிருந்து பொதுமக்களை கடித்து பதம் பார்த்து வருகிறது இதனால் பொதுமக்கள் பலரதுஉடம்பில் ஒருவகையானஅரிப்பு எடுத்து சிவந்த தழும்புகள் ஏற்பட்டுசிறு சிறு புண்கள் தோன்றி ஒருவித காந்தலெடுத்து மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர் . அதுவும் கடையநல்லூரின் பிரதான பகுதியாக விளங்கும் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் அருகே கழிவு நீர் பல மாதங்களாக தேங்கி கொசுக்களின் கூடாரமாக மாறி வருகிறது இதே போல் திலகர் தெரு , ரயில்வே பீடர் சாலை, பெரியகுளம் மறுகால்வாய் , உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்று கழிவுநீர்கள் சீராக வழிந்தோடாமல் ஆங்காங்கே தேங்கி நோய் பரவ காரணமாக இருப்பதோடு கொசுக்களின் கூடாரமாக விளங்கி வருகிறது. உள்ளபடியே கொசு மருந்துகள் தெளிக்கின்ற பணிகள் எல்லாம் பல மாதங்களாக முடங்கி விட்டது ஏதாவது புகார் செய்தால் மட்டுமே அந்த பகுதி மக்களை திருப்திப்படுத்தும் வகையில் ஏதோ? ஏனோ? தானோ? என்ற ளவில் தரம் இல்லாத கொசு மருந்துகளை தெளித்து அதை புகைப்படம் பிடித்து வாட்ஸ் அஃப் குழுவிலும், செய்தித்தாள்களிலும் தங்கள் பணியை மெச்சி விளம்பரப்படுத்திக் கொள்வது ஒன்றயே அதிகாரிகள் தங்களது தலையாய கடமையாகக் கொண்டுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் வேலாயுதம் என்பவர் கூறுகையில்
வருமுன் காப்போம் சுகாதாரத்தை பேணுவோம் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதிப்போம் ஈ மொய்க்கும் பண்டங்களை விற்பனைக்கு தடை செய்வோம் என பல்வேறு அரசு விதிகளை இந்த நகராட்சி நிர்வாகம் பேணி காப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை பொதுமக்கள் இடையேயும் மாவட்ட நிர்வாகத்திடையேயும் உண்மைக்கு புறம்பான வகையில் காண்பித்துக் கொண்டிருக்கின்ற அதிகாரிகள் உள்ளபடியே சுகாதாரத்தை பேணுவதில் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை நகரில் உள்ள வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், பாத்திரங்களில், கொசு இருக்கிறதா? என தங்களது ஊழியர்களை கொண்டு மோப்பம் பிடித்து அபராத விதிப்பதில் ஆர்வம் காட்டுகின்ற நகராட்சி சுகாதாரத்துறை இதுபோன்று நகரில் பல்வேறு பகுதிகளில் தேங்கும் கழிவுநீர்களை வழிந்தோட செய்ய ஆர்வம் காட்ட முடியாதது ஏன் ? குறிப்பாக இப்படி ஆங்காங்கே தேங்கும் கழிவு நீரில் முழுவதுமாக மூழ்கி குத்தாட்டம் போடும் பன்றி கூட்டத்தின் அலப்பறைகளும் அது நகர் முழுவதும் உலா வருவதையும் பார்க்கின்றபோது கடையநல்லூர் நகராட்சி சுகாதாரத்துறை சுகாதாரத்தை பேணும் லட்சணத்தை பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் தெரியவரும் மொத்தத்தில் கடையநல்லூர் நகராட்சி சுகாதாரத்துறை ஹோமா நிலைக்குப் போய்விட்டது என்பதே நிதர்சன உண்மை இவ்வாறு மோகன் வேலாயுதம் தெரிவித்தார் கடையநல்லூர் நகராட்சியை பொருத்தவரையில் திறந்த வழிகளில் மலம் கழிப்பதை , கழிவு நீர் கால்வாய் சீராக வழிந்து ஓடுவதை, கொசுக்கள் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொது மக்களின் எதிர்பார்ப்பாய் உள்ளது.



