திருச்சி, ஜூன் 20 –
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் தவளவீரம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வாளிகளைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததே மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



