திருச்சி, ஜூன் 4 –
திருச்சி கீழதாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த 14 வயதுச் சிறுமி, தனது அண்ணனை (அண்ணன் ஒரு திருநங்கை) பார்க்கச் சென்றபோது தனியே அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மது ஊற்றிக் கொடுத்துப் பாலியல் தொல்லை அளித்ததாக ஓட்டுநர் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. மதுபோதையில் சிறுமி சுயநினைவின்றி கிடந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த ஓட்டுநரைப் பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர். இச்சம்பவம் குறித்துச் சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



