புதுக்கடை, நவ. 10 –
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் மனு (38). இவருக்கு திருமணம் ஆகி றீஜா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது மனைவி றீஜா கணவரை பிரிந்து குவைத் நாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் மனு கேரளாவை விட்டு தேங்காப்பட்டணம் பகுதிக்கு வந்து மீன் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நீரோடியை சேர்ந்த அந்தோணி பிச்சை என்பவரது படகில் கேரளாவை சேர்ந்த மேலும் ஐந்து பேருடன் மீன்பிடிக்க சென்று விட்டு கடந்த 7ம் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் வந்துள்ளனர். அங்கு பரக்கணி என்ற பகுதியில் படகை நிறுத்தி வைத்துவிட்டு உரிமையாளரும் மற்றும் மூன்று பேரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். படகில் மனு மற்றும் 2 பேர் தங்கி இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அன்று மதியம் திடீரென மனுவை படகில் காணவில்லை. அடுத்த நாள் அவர் தண்ணீரில் விழுந்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரது உடலை
குழித்துறை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இது குறித்து மனுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர் பாபு என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மனு எப்படி இறந்தார்? என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


