அஞ்சுகிராமம், ஜூன் 9 –
அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஊக்கதொகை மயிலாடி றிங்கல்தௌபே அரசு மேல்நிலை பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் தனிப்பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடத்திற்கு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு 1 மார்க் 5000, 2 மார்க் 3000, 3 மார்க் 2000 ரூபாய் பரிசுத் தொகையாகவும் 12ம் வகுப்பில் 1 மார்க் 5000, 2 மார்க் 3000, 3 மார்க் 2000 பரிசுத் தொகையாகவும் மற்றும் கம்யூப்டர் சயின்ஸ்
பாடப்பிரிவில் 100/100 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் எட்வின், மயிலாடி பேரூராட்சி செயலாளர் விஜய், இணை செயலாளர் சுரேஷ், பொருளாளர் பிரவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையேற்று பரிசுகளை மாவட்ட செயலாளர் மாதவன் வழங்கினார். சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கே டி உதயம், காங்கிரஸ் வட்டார தலைவர் தங்கம் நடேசன் மற்றும் பள்ளி தாளாளர் ஜெரோம் எபின், பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.



