சுசீந்திரம்.ஏப்.14
சுசீந்திரம் அருகே உள்ள புது கிராமத்தில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில் ஒன்று உள்ளது இந்த கோவிலில் தினம் தோறும் காலை மாலை வேளைகளில் சிறப்பு அலங்கார தீபாதாரணை நடைபெறும் பழமையான கோவில் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் உள்ள பக்தர்களும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள் சனிக்கிழமை தோறும் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாரதனையும் சில சமயங்களில் அன்னதானமும் நடைபெறும் இந்தக் கோவிலை அரசர் கட்டியதாகவும் கோவிலுக்கு முன்பு கொடிமரம் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன எனவும் கொடிமரம் இருந்ததால் முற்காலத்தில் தேரோட்டமும் இங்கு நடந்திருக்கலாம் என பெரியவர்கள் கூறுகின்றனர் இப்படிப்பட்ட பழமையான பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் மாலையில் கோவில் பூஜைகளை செய்து விட்டு கோவில் பூஜாரி பிரதீ ப் நம்பூதிரி 40 கோவில் கதவை அடைத்து சென்றுவிட்டார் நேற்று அதிகாலை கோவில் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்று பார்க்கும் போது கோவில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது மர்ம நபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளேசென்று இரண்டாவது கதவு பூட்டையும் உடைத்து உள்ளனர் பின்பு கருவறை பூட்டை உடைக்க முடியாத காரணத்தினால் அங்கும் இங்கும் சுற்றி பார்த்துவிட்டு கோவிலில் இருந்த சிசிடி கேமராவையும் உடைத்து விட்டு ஏதும் கிடைக்காததால் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர் ஆனால் அவர்கள் வரும் வரை உள்ள பதிவுகள் சிசிடி கேமராவில் பதிந்துள்ளதாக தெரிகிறது சம்பவம் அறிந்ததும் கன்னியாகுமாரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு உள்ளார் மேலும் அந்தப் பகுதியில் ஏதாவது சிசிடி கேமரா இருக்கின்றதா வேறு ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என நடந்தே சென்று பார்வையிட்டார் உடனடியாக மர்ம நபர்களை பிடிக்க சுசீந்திரம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார் ஏற்கனவே இந்த கோவில் பூட்டை நாகர்கோவிலை சார்ந்த மூன்று பேர் உடைத்து கோவிலுக்குள் இருந்த விளக்குகள் பூஜை பொருட்களை திருடி தப்ப முயலும் பொழுது பொதுமக்கள் திருடர்கள் தப்ப முடியாமல் அவர்களைத் தடுத்து நிறுத்தி சுசீந்திரம் காவல்நிலையத்திற்க்கு தகவல் அளித்து சுசீந்திரம் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர் அதற்குப் பின்பே கோவில் வேலைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது



