திருவெண்ணெய்நல்லூர், ஆக. 20 –
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ 75-வது பிறந்தநாள் மற்றும் பவள விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி திமுக நிர்வாகிகள் விழுப்புரத்தில் காலை முதலே குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் கலைஞர் அறிவாலயம் விழாக்கோலம் பூண்டது. அப்போது விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ வுக்கு மேள, தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் பி.வி.ஆர். விசுவநாதன் தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் டி. பனப்பாக்கம் சுதா சீனுவாசன் ஏற்பாட்டில் திருவெண்ணெய்நல்லூர் கடைவீதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதனை தொடர்ந்து வேன், கார், டூவீலர் வாகனங்களில் அணிவகுத்து சென்று முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ வை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.



