தென்தாமரைகுளம், ஜூலை 2 –
தென்தாமரைகுளத்தில் த.வெ.க சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்து. தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ஜோசப் விஜய் -ன் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்தாமரைகுளம் அரசு தொடக்கப்பள்ளி அருகே வைத்து தென்தாமரைகுளம் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 52 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய த.வெ.க செயலாளர் எட்வின் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் ஸ்டான்லி ரூபஸ் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட நிர்வாகி அருள் ஞானபெல் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிக்சன் 52 பேருக்கு மரக்கன்றுகளை வழங்கினார். தாமரை முருகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முடிவில் பேரூர் இணைசெயலாளர் சகாய ஷைனி நன்றியுரையாற்றினார்.
விழாவில் ஜேம்ஸ், பெனிட், ஜெபராஜ், காலேப் பிரவின் உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



