திருவெண்ணெய்நல்லூர்.செப்.13-
திருவெண்ணெய்நல்லூர் அருகே கும்பாபிஷேக விழாவில் இளம் தொழிலதிபருக்கு கலசம் வழங்கி கௌரவிப்பு. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.எடையார் கிராமம். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாணிக்க விநாயகர், ஸ்ரீபாலமுருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் திருவெண்ணெய்நல்லூர் திமுக மேற்கு ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் வளர்ந்து வரும் இளம் தொழிலதிபருமான டி.எடையார் பாலாஜி பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் கலசம் வழங்கி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. அப்போது திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.



