நாகர்கோவில், மார். 18 –
கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தல் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மனாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், தேர்தல் ஒரே கட்டமாக 23.04.2026 அன்று நடத்தப்பட உள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு சுபாஸ்ரீ நந்தா, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு அபுபக்கர் சித்திக், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு ராம்டின்லியானி, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு பிரியங்கா பாசு இங்டி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஓம் பிரகாஷ் ராய், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு மனோஜ் குமார், ஆகியோர் பொதுபார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு ஆர்.ராஜேஷ், நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளுக்கு சரண்ஜோஸ், பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளுக்கு நிஷாந்த், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு ஹரி ஓம் மீனா ஆகியோர் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்களுக்கு காவல் பார்வையாளராக சுபாஷ் சந்திர தூபே நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


